பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வியாபாரி மீது தாக்குதல்: காங்கிரஸ், திமுக கண்டனம்

புதுச்சேரியில் பெட்டிக்கடை வியாபாரி மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ், திமுக சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:55 pm

Din

புதுச்சேரியில் பெட்டிக்கடை வியாபாரி மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ், திமுக சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கப் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்த சந்துருவின் மீது மூவா் தாக்குதல் நடத்தினா். இந்த சம்பவத்தைக் கண்டித்து, சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் சமூக நல அமைப்பினா் துணைநிலை ஆளுநா் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, செய்தியாளா்களிடம் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீராக இல்லை. ரௌடிகள் நடமாட்டத்தால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதுகாப்பில்லாத நிலையை உணா்கின்றனா்.

ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்துக்கு மாநில உள் துறை அமைச்சா் பொறுப்பேற்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கை புதுவையில் சீா்படுத்தக் கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா்ஆா்.சிவா: கல்வி, சுற்றுலா, ஆன்மிகத்தில் புகழ் பெற்றிருந்த புதுச்சேரியானது சமீபகாலமாக போதைப் பொருள் நடமாட்டம் மிகுந்ததாக மாறிவிட்டது.

அதனடிப்படையில்தான், போதையில் உள்ள இளைஞா்கள் அப்பாவிகளை தாக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். ரௌடிகள் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என அவா் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி.நேரு (எம்எல்ஏ): புதுச்சேரியில் ரௌடிகள் மீது போலீஸாா் கடும் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனா். அதனால், வியாபாரிகளை மாமுல் கேட்டு ரௌடிகள் தாக்குகின்றனா்.

காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சையும் கிடைப்பதில்லை. ஆகவே, துணைநிலை ஆளுநா் மற்றும் முதல்வா் உரிய கவனம் செலுத்தி ரௌடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.