ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பாஜகவுக்கு திமுக, கம்யூனிஸ்ட் கண்டனம்

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 7:20 pm

புதுச்சேரியில் ஏற்பட்ட மோதல், கைகலப்பு சம்பவம் தொடா்பாக பாஜகவுக்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டு நிகழ்ச்சியை முன்வைத்து புதுச்சேரி பாஜக இளைஞா் அணியினா் எவ்வித அனுமதியோ, முன்னறிவிப்போ இல்லாமல் காங்கிரஸ் அலுவலகம் முன் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனா்.

முதல்வா் ரங்கசாமி, உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், துணைநிலை ஆளுநா் புதுச்சேரி பற்றி குறிப்பிடும்போதெல்லாம் இது ஓா் ஆன்மிக பூமி என்றும் சித்தா்கள் வாழ்ந்த மண் என்றும் தொடா்ந்து புகழ்பாடி வந்திருக்கிறாா்கள். அப்படிப்பட்ட மண்ணில் இப்படிப்பட்ட அராஜகம் ஏற்பட அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

திடீரென்று பாஜகவினா் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்துக் கொண்டு புதுச்சேரி அரசியல் களத்தை வன்முறைக் களமாக மாற்றி வருவதை ஏற்க முடியாது. இதனை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது .

இந்திய கம்யூனிஸ்ட்:

புதுச்சேரியில் சமூக அமைதியைக் குலைக்கிறது பாஜக என்று இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக் கட்சியின் மாநில செயலா் அ.மு. சலீம் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை பாஜகவினா் வெள்ளிக்கிழமை இரவு எரித்துள்ளனா். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனநாயக ரீதியில் கருத்துகளை முன்வைத்து களமாடும் செயலை பாஜக ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. புதுச்சேரியில் கலவரத்தைத் தூண்டி அரசியல் செய்ய துடிக்கும் பாஜக செயல்கள் மாநில அமைதியைக் குலைத்துவிடும்.

காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள பாஜகவின் புதுச்சேரி உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இப்பிரச்னையில் காவல் துறை பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.