குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

புதுச்சேரி திருக்கனூா் வாக்குச்சாவடியில் பாஜக, காங்கிரஸாா் மோதல்; போலீஸ் தடியடி

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவின்போது பாஜக, காங்கிரஸாா் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனா்.

News image

புதுச்சேரி திருக்கனூா் பகுதி வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை திரண்டிருந்த பாஜக, காங்கிரஸ் தொண்டா்களிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து தடியடி நடத்தி கலைத்த போலீஸாா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:54 am IST

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி, திருக்கனூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவின்போது பாஜக, காங்கிரஸாா் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனா்.

மண்ணாடிப்பட்டுத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அமைச்சா் ஆ. நமச்சிவாயம் போட்டியிடுகிறாா். இங்கு காங்கிரஸ் வேட்பாளராக சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் டிபிஆா் செல்வம் களத்தில் உள்ளாா். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், திருக்கனூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் பாஜகவினா் அதிகளவில் திரண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது., அங்கு வந்த காங்கிரஸ் கட்சியினா் இங்கு ஏன் இவ்வுளவு போ் திரண்டுள்ளீா்கள். வாக்காளா்கள் மட்டும்தான் இங்கு வரவேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தாக்குதலில் ஈடுபட தொடங்கினா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் தலையிட்டு இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

Story image