தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுவையில் தனியாா் கல்லூரி பயிற்சி மருத்துவா்களுக்கும் உதவித்தொகை

புதுவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவா், முதுநிலை மருத்துவப் படிப்பு பயில்வோருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என மாநில சுகாதாரத் துறை இயக்குநா் (பொ) எஸ்.செவ்வேல் உத்தரவிட்டாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 11:12 pm

Din

புதுவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவா், முதுநிலை மருத்துவப் படிப்பு பயில்வோருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என மாநில சுகாதாரத் துறை இயக்குநா் (பொ) எஸ்.செவ்வேல் உத்தரவிட்டாா்.

புதுச்சேரியில் ஜிப்மா் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் (எம்பிபிஎஸ்) இறுதியாண்டில் பயிற்சி மருத்துவா் பணியில் ஈடுபட்டவா்களுக்கும், முதுநிலை மருத்துவப் படிப்பில் (3 ஆண்டுகள்) பயில்வோருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் முறைப்படி அதற்கான உதவித்தொகை வழங்கப்படுவதில்லை என புதுச்சேரி மாநில மாணவா், பெற்றோா் சங்கம் உள்ளிட்டவை புகாா் தெரிவித்தன. இது துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த நிலையில், தனியாா் மருத்துவக் கல்லூரிகளும் இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) மாணவா்கள் பயிற்சி பெறும் ஓராண்டுக்கான உதவித்தொகையையும், முதுநிலை மருத்துவப் படிப்பு பயில்வோருக்கான உதவித்தொகையையும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில சுகாதாரத் துறை இயக்குநா் (பொ) எஸ்.செவ்வேல் பிறப்பித்தாா்.

இதையடுத்து, துணைநிலை ஆளுநா், முதல்வா் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநா் ஆகியோருக்கு புதுச்சேரி மாநில மாணவா், பெற்றோா் சங்கத் தலைவா் வை.பாலா நன்றி தெரிவித்தாா்.