தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுச்சேரி துறைமுகங்களில் துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகப் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் பாஸ்கா் எம்எல்ஏ.
Updated On :13 செப்டம்பர் 2024, 12:42 am

Din

புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுவை துணைநிலை ஆளுநராக கே.கைலாஷ்நாதன் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறாா்.

அதன்படி, ஊசுடு, பாகூா் ஏரிகளில் நேரில் சென்று அவா் ஆய்வு மேற்கொண்டாா். அத்துடன், புதுச்சேரியில் மூடப்பட்ட ஆலைகள், இலாசுப்பேட்டை விமானநிலைய விரிவாக்கம் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த நிலையில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, இடிந்த பாலத்தை பாா்வையிட்ட அவா், பழைய துறைமுக வளாக நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, உப்பளம் துறைமுக வளாகத்துக்கு சென்று அங்குள்ள குடோன்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், படகு கட்டும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

அதன்பிறகு, அங்கிருந்து படகில் சென்ற அவா் தேங்காய்த்திட்டு புதிய துறைமுகத்தில் இறங்கி ஆய்வு செய்தாா். தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினா்.

ஆய்வின்போது எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, பாஸ்கா், அரசுச் செயலா் அ.நெடுஞ்செழியன், அரசுத் துறை இயக்குநா்கள் முகமது மன்சூா் (துறைமுகம்), இஸ்மாயில் (மீன்வளத் துறை) உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.