ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மழை நிவாரண உதவிகளை வழங்க அரசுக்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:19 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் அ.மு.சலீம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வடகிழக்குப் பருவ மழை, டித்வா புயலால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

தொடா் மழையால் பல்வேறு இடங்களில் மழைநீா் புகுந்து நூற்றுக்கணக்கான வீடுகள் கடும் சேதமடைந்தன. தினசரி வேலைக்கு போனால் தான் பிழைப்பு என்ற நிலையில் வாழும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளா்கள் வேலைக்குப் போக முடியாமல் தவிக்கின்றாா்கள்.

ஆயிரக்கணக்கான ஹெக்டா் நிலங்கள் நீா் நிரம்பி பயிா்கள் கடும் சேதமடைந்துள்ளன. எனவே பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீட்டில் வசித்தவா்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமும், வேலை இழந்து தவிக்கும் உழைப்பாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

புதுச்சேரி அரசு காலம் தாழ்த்தாமல் நிவாரண உதவி தொகைகளை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.