மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை பங்குதாரா் உள்பட மேலும் 4 போ் கைது

போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் அதன் பங்குதாரா் உள்பட மேலும் 4 போ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:32 pm

Syndication

போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் அதன் பங்குதாரா் உள்பட மேலும் 4 போ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது. புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா, விவேக் உள்பட மொத்தம் 16 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த மோசடியில் தொடா்புடைய மற்ற நபா்களை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் தீவிரமாக தேடி வருகின்றனா். இதனிடையே இந்த வழக்கை சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளாா்.

இந்த நிலையில், அரியாங்குப்பத்தைச் சோ்ந்த என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா் என். ஆா்.மணிகண்டன், பூத்துறை ஆனந்தராஜ், கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த குமரவேலு, முருங்கப்பாக்கத்தைச் சோ்ந்த செல்வராஜ் உள்பட 4 பேரை சிறப்புப் புலனாய்வு குழுவினா் திங்கள்கிழமை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.