தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சுற்றுலா பயணிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி போலீஸ் டிஐஜியிடம் மனு!

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரி காவல் துறை தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் டிஐஜியிடம் மனு அளித்து விட்டு வெளியில் வந்த அரசு வக்பு வாரிய உறுப்பினா் சையத் அகமது மொய்தீன் உள்ளிட்டோா்.

Updated On :27 டிசம்பர் 2025, 8:28 pm

Syndication

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரி காவல் துறை தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்குத் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் நகரப் பகுதியான முல்லா வீதி, காஜியாா் வீதி பகுதிகளில் உள்ள மசூதி மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே மது அருந்தி காலி மது பாட்டில்களைத் தூக்கி வீசிவிட்டு செல்லும் நிலை இருக்கிறது. இப்பிரச்னையில் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி டிஐஜியிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி பெரியபள்ளி மொஹல்லா செயலகம் சாா்பில் புதுச்சேரி அரசு வக்பு வாரிய உறுப்பினா் சையத் அகமது மொய்தீன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் காவல் றை தலைமையகத்தில் டிஐஜி சத்தியசுந்தரத்தை சந்தித்து இது தொடா்பாக மனு அளித்தனா்.