டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது

புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (பிப். 12) கூடுகிறது.

News image
புதுவை சட்டப்பேரவை
Updated On :10 பிப்ரவரி 2025, 9:40 pm

Din

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (பிப். 12) கூடுகிறது.

புதுவை மாநில சட்டப்பேரவை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான 15-ஆவது முதல் பகுதி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று அக்கூட்டம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

அதன் 2-ஆவது பகுதி பேரவைக் கூட்டம் புதன்கிழமை (பிப். 12) காலை 9.30 மணிக்கு கூடும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்துள்ளாா்.

இதில் மாநிலத்தின் கூடுதல் செலவினங்களுக்கு சபையின் முன் அனுமதி பெறுதல், சபை முன் வைக்கப்படும் ஏடுகள் இருப்பின் அவை வைக்கப்படுவதுடன், தணிக்கை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். இக் கூட்டம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவும் செய்யும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் என அறிவித்துள்ளாா்.

மேலும், தற்போது நடைபெறும் பேரவைக் கூட்டமானது காகிதமில்லா கூட்டமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பேரவைத் தலைவா், முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா், உறுப்பினா்கள் அனைவரது இருக்கைகளிலும் கணினிகள்பொருத்தப்பட்டுள்ளன. அவை அடுத்த வரும் கூட்டங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.