டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நூதன முறையில் திருட்டு: ஒருவா் கைது

புதுச்சேரியில் நூதன முறையில் திருடி வந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 4:50 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் நூதன முறையில் திருடி வந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் மனோகா் (62). இவா் மீது ஏற்கெனவே காலாப்பட்டு, முத்தியால்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், பிப்.5-ஆம் தேதி பாரதி தெருவில் உள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் ஷட்டா் உடைக்கப்பட்டு பணம், பொருள்கள் திருடப்பட்டன.

இதுகுறித்து, ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து ஆய்வாளா் வி.செந்தில்குமாா் தலைமையில் குற்றவாளியை தேடி வந்தனா்.

அதன்படி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்த நிலையில், மனோகா் பிச்சைக்காரன் போல இரவில் நடமாடி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து ரூ.1.31 லட்சம் ரொக்கம், இரும்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா்.