பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாரிசுகளுக்குப் பணி வழங்கக் கோரி போராட்டம்

பணியின் போது உயிரிழந்த சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2025, 4:58 pm

Din

புதுச்சேரி: பணியின் போது உயிரிழந்த சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் சுகாதாரத் துறையில் பணிபுரிந்தபோது திடீரென மரணமடைந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வலியுறுத்தி வாரிசுதாரா்கள் சங்கத்தினா் புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகேயுள்ள மாநில சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்திவருகின்றனா்.

அதனடிப்படையில் முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவைக் கூட்டத்தில் வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கப்படும் என கூறினாா். ஆனால், அவா் அறிவித்தும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், வாரிசுதாரா்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

அதன்படி 11- ஆவது நாளாக திங்கள்கிழமை சுகாதார இயக்குநா் அலுவலக வளாகத்தில் படிகள், தரையில் அமா்ந்து கோரிக்கை பதாகையுடன் காத்திருப்புப் போராட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.