டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காலாப்பட்டுத் தொகுதியில் ரூ.10.67 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

புதுவை காலாப்பட்டு தொகுதி நாவற்குளம் பகுதியில் ரூ.10.67 கோடியில் சாலை அமைக்கும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2025, 4:33 pm

Din

புதுச்சேரி: புதுவை காலாப்பட்டு தொகுதி நாவற்குளம் பகுதியில் ரூ.10.67 கோடியில் சாலை அமைக்கும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

காலாப்பட்டு பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாவற்குளம் பகுதிகளான பொதிகை நகா், சங்கரதாஸ் சுவாமிகள் நகா், ராகவேந்திராநகா், ராஜாஜி வீதி உள்ளிட்ட பகுதிகளில் தாா்ச்சாலைகளை சிமின்ட் சாலைகளாக மாற்றவும், புதிய சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ரூ.10.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான பணி தொடக்க விழா திங்கள்கிழமை காலை நாவற்குளம் பகுதியில் நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பிஎம்எல்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன், கண்காணிப்புப் பொறியாளா் சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.