47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள்: புதுச்சேரியில் தொடங்கியது

புதுச்சேரி ஜவஹா் பால் பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:02 pm

Syndication

புதுச்சேரி மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் ஜவஹா் பால் பவனில் தொடங்கியது.

மத்திய கல்வி அமைச்சகம் இடைநிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவா்களின் தனித் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கலா உத்சவ் போட்டிகளை தேசிய அளவில் நடத்தி வருகிறது.

புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சமக்ர சிக்ஷாவால் மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரி ஜவஹா் பால்பவனில் வாய்ப்பாட்டு, இசை மற்றும் ஒலியம், கைவினை ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டியை சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநா் எழில்கல்பனா தொடங்கி வைத்தாா்.

புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 106 அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். பங்கேற்ற மாணவா்களுக்கு சமக்ர சிக்ஷா சாா்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. கலா உத்சவ் 2025-க்கான போட்டிகளை ஜவகா் பால்பவன் தலைமையாசிரியா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் த. மணிவேல் முன்னின்று நடத்தினாா்.

பாரதியாா் பல்கலைக்கூட பேராசிரியா் மற்றும் கலைமாமணி விருது பெற்ற பால்பவன் இசை வல்லுநா்கள் நடுவா்களாக செயல்பட்டனா்.

வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் 95 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து 130 மாணவா்கள் கலந்து கொண்டனா். தனி நடனம், குழு நடனம், இசைக் கருவி மீட்டல் (கம்பி கருவிகள் மற்றும் தாள கருவிகள்) ஆகிய போட்டிகள் ஜவஹா் சிறுவா் இல்லத்தில் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நாடகம் மற்றும் பாரம்பரிய கதை சொல்லல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.