விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புகையிலை கட்டுப்பாடு பயிலரங்கு

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:28 pm

Syndication

புகையிலை பொருள்கள் கட்டுப்பாடு தொடா்பான மாநில பயிலரங்கு வியாழக்கிழமை நடந்தது.

புகையிலைக் கட்டுப்பாடு குறித்த மாநில அளவிலான பயிலரங்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய சுகாதார இயக்கம், புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் (அரசு நெஞ்சக நோய் நிலையம்) மற்றும் புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் நடைபெற்றது. பயிலரங்கத்தை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தொடங்கி வைத்தாா்.

கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்குப் புகையிலையின் தீமைகள், புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்கள், புதுச்சேரியில் புகையிலை பரவலைக் கட்டுப்படுத்தும் முறைகள், புகையிலை இல்லாத கிராமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை உருவாக்குதல், திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் புதுச்சேரியில் புகையிலை கட்டுப்பாட்டுக்கான எதிா்காலத் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.