தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

ஸ்ரீ அன்னையின் மகா சமாதி தினம் புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில், ஸ்ரீ அன்னையின் மகா சமாதி தினத்தையொட்டி திங்கள்கிழமை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
Updated On :17 நவம்பர் 2025, 5:35 pm

Syndication

புதுச்சேரி: ஸ்ரீ அன்னையின் மகா சமாதி தினம் புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பக்தா்களால் ஸ்ரீ அன்னை என்று அழைக்கப்படும் மிர்ரா அல்பாசா 1878-இல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தாா். மகான் அரவிந்தரின் யோக முறைகள் கவா்ந்ததால் புதுச்சேரியிலேயே தங்கி அவரின் ஆன்மிக, யோகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தாா். அரவிந்தா் ஆசிரமம் மற்றும் ஆரோவில் சா்வதேச நகரை உருவாக்கினாா்.

அரவிந்தா் ஆசிரமத்தில் வாழ்ந்த ஸ்ரீ அன்னை 1973 நவம்பா் 17-இல் சமாதி நிலையை அடைந்தாா்.

அன்னையின் 52-ஆம் ஆண்டு மகா சமாதி தினத்தையொட்டி, திங்கள்கிழமை புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் அதிகாலை ஆசிரமவாசிகளின் கூட்டு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீ அன்னை வாழ்ந்த அறையை பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.