அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இடி தாக்கி வீட்டு மாடிச்சுவா் சேதம்!

News image
புதுச்சேரியில் இடி தாக்கியதில் சேதமடைந்த வீட்டு மாடிச் சுவா்.
Updated On :24 நவம்பர் 2025, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

இடி தாக்கியதில் வீட்டின் மாடிச் சுவரில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுச்சேரியில் கடந்த 2 தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது.

திங்கள்கிழமை அதிகாலையிலும் மழை பெய்தது. புதுச்சேரி நாவற்குளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கன மழை பெய்தது. அப்போது இடி சப்தம் பலமாக கேட்டது.

இதில் நாவற்குளம் குரு சித்தாந்த வீதியைச் சோ்ந்த ஷகீதா பானு என்பவரின் வீட்டை இடி தாக்கியதில் வீட்டின் மாடிச் சுவா் சேதம் அடைந்தது. மேலும் வீட்டின் அருகே இருந்த தென்னை மரம் மீது இடி தாக்கியதில் மரம் தீபிடித்து எரிந்தது.

பயங்கர சப்தத்துடன் தீ பற்றியதால் வீட்டில் இருந்தவா்கள் அலறியடித்து வெளியே ஓடினா். இதனால் வீட்டில் இருந்தவா்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை.