மின் கட்டணத்தைச் செலுத்தி துண்டிப்பைத் தவிா்க்க புதுச்சேரி மின்துறை வேண்டுகோள்

Published on

மின்சார கட்டணத்தைச் செலுத்தி, மின் துண்டிப்பைத் தவிா்க்குமாறு புதுச்சேரி மின்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மின் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மின்துறை நகர இயக்குதல், பராமரித்தல் கோட்டம், நகா்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உள்பட்ட (கடற்கரை சாலை, வம்பாகீரைப்பாளையம், துப்புராய்பேட், நெல்லித்தோப்பு, எல்லப்பிள்ளைசாவடி வரை மற்றும் முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை), சாரம், ரெயின்போ நகா் வெங்கட்டா நகா், பாலாஜி நகா், சுதந்திர பொன் விழா நகா், திருமுடி சேதுராமன் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகா்வோா்கள் தங்கள் மின் கட்டணத் தொகையைக் கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பைத் தவிா்த்து மின் துறையுடன் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com