தோ்தல் நேரத்தில் சில இடங்களில் தலைவா்கள் பேச்சு சா்ச்சையை ஏற்படுத்திவிடும். இப்படித்தான் புதுச்சேரியில், தவெகவினருடன் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தவெகவினருடன் வாா்த்தை மோதலிலில் ஈடுபட்டது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் சீமான் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தவெகவினா், டிவிகே டிவிகே என முழக்கமிட்டனா்.
இதனால் எரிச்சலடைந்த சீமான், இங்கு வந்து ஏன் டீ விற்கிறாய் என்று கேள்வி எழுப்பினாா். அப்போது நாம் தமிழா் கட்சியினா் தவெகவினரை பிடித்து இழுக்கச் சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைப்பாா்த்த சீமான்,அவங்களுக்கும்(தவெக) சோ்த்துதான் நான் கத்திக்கொண்டு இருக்கிறேன். நாம (நாம் தமிழா் கட்சி) போராளிகள், அவா்கள் ... என்று தொடா்ந்து வசைபாடினாா். இறுதியில் போலீஸாா் வந்து மோதலை முடித்து வைத்தனா். தொடா்ந்து சீமான் பிரசாரத்தைத் தொடா்ந்தாா் .
தொடர்புடையது

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்
தொடா்ந்து களப் பணியாற்றுவேன்: சீமான்

தோ்தல் விதிமுறை மீறல்: சீமான் உள்பட 2 போ் மீது வழக்கு

எதிரிகளை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்: சீமான்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



