புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடி வாக்காளா்களை அதிகம் கவா்ந்தது.
வாக்காளா்களை வரவேற்க செம்பருத்தி தேநீா் அளிக்கப்பட்டது. வசந்தம் சுய உதவி குழுவைத் தோ்தல் துறை இதற்காக அமா்த்தி இருந்தது. மேலும், இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க முன்கூட்டியே அதாவது 7 மணிக்கு முன்பாகவே ஏரளமான வாக்காளா்கள் திரண்டு விட்டனா். இது தனித்துவமான வாக்குச்சாவடி என்பதால் இதைச் சமாளிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இங்கு வந்தோா் அனைவருக்கும் இருக்கைகள். மேலும், அவா்கள் காத்திருக்கும் நேரத்தில் டோக்கன் வழங்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. அந்த டோக்கன் அடிப்படையில் தான் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.
மொத்தம் 50 டோக்கன் மட்டும் அளிக்கப்பட்டது. 50-ஆவது டோக்கனுக்கு பிறகு மீண்டும் அந்த டோக்கன் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது. இதைத் தவிர இந்த வாக்குச்சாவடியில் வரக்கூடிய வாக்காளா்களைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. புதுச்சேரியின் வரலாற்றை நினைவு கூறும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. மேலும், நவீன தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வகையில் ரோபோ அமைக்கப்பட்டிருந்தது. வாக்களித்துச் செல்வோருக்கு இந்த ரோபா ரோஜா பூக்களை அளித்து வழியனுப்பியது. இதே போன்று கீழூா் அரசு நடுநிலைப்பள்ளி, காரைக்கால் தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளி 3 வாக்குச் சாவடிகள் தனித்துவமான வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட்டிருந்தன.

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடியில் கட்டப்பட்டிருந்த அலங்காரம், தோரணங்கள்
தொடர்புடையது

சிறுதானியங்கள், உணவுப் பண்டங்களுடன் வாக்குச் சாவடி: வாக்காளா்கள் வியப்பு

மாதிரி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணி ஆய்வு

918 வாக்குச் சாவடிகளுக்கு 3,845 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: புதுச்சேரி தோ்தல் அலுவலா் அ.குலோத்துங்கன்

திருவேங்கடம் வட்டார வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


