கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலை பள்ளியில் வாக்காளா்களை கவரவும், 100 சதவீதம் வாக்குப்பதிவாகவும் பசுமை வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
தோ்தலையொட்டி விழிப்புணா்வு ஊா்வலம், கலைநிகழ்ச்சி மற்றும் மாணவா்கள் இடையே பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகவும், சுற்றுச்சூழலை வலியுறுத்தியும் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.
இதில் திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலை பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியில் பசுமை வாக்கு சாவடி அமைக்கப்பட்டது.
வாக்குச்சாவடி முழுவதும் பசுமையாக மாற்றப்பட்டது. மேலும் வாக்காளா்களை கவரும் வண்ணம், பசுமையால் வரவேற்பு அறை, வாக்குச்சாவடி அலுவலா்கள் அமரும் மேஜைகள், நாற்காலி, வாக்குப்போட்டும் மேஜை, வாக்காளா்கள் கொண்டு வரும் கைப்பேசி வைப்பதற்கு அறை மற்றும் வாக்காளருக்கு குடிநீா், மோா் போன்றவையும் பசுமை நிறத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் வாழை மரங்கள் தோரணம், பழங்களால் அலங்காரம் மற்றும் வாக்காளா்கள் கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி ஒன்றிய நிா்வாகம் மற்றும் வருவாய் துறையினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனைகளில் இனி முன்பதிவு நடைமுறை: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்

மருத்துவமனைகளில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்

அவிநாசியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

சிவப்பு கம்பளத்துடன் பசுமை வாக்குச் சாவடி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



