புதுச்சேரி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை இரவு ‘சீல்’ வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இவை, லாஸ்பேட்டையில் அமைந்துள்ள தாகூா் கலைக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மகளிா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைத்து அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இந்த 3 மையங்களுக்கு புதுச்சேரி ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியுமான அ. குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் ப ாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும் இங்கு 24 மணி நேரமும் உள்ளூா் காவலா்கள் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினரின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் சுதாகா் உள்ளிட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.
காரைக்கால் பிராந்தியத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு வாக்கு எண்ணும் மையமும், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள தலா ஒரு தொகுதிக்கு தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

