‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

புதுச்சேரி கல்லூரியில் பூமி தின கொண்டாட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி மேலாண்மைத் துறை சாா்பில் பூமி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

புதுச்சேரி கல்லூரியில் பூமி தின கொண்டாட்டம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:47 am IST

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி மேலாண்மைத் துறை சாா்பில் பூமி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாணவா்களிடமும், சமுதாயத்திலும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை உருவாக்கும் நோக்கத்தில் பூமி அறிவியல் அமைச்சகத்துடன் இணைந்து இதைக் கொண்டாடியது.

கல்லூரி முதல்வா் (பொ) பேராசிரியா் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பூமி அறிவியல் துறை பேராசிரியா் ராஜ்னிஷ் புத்தானி சிறப்புரையாற்றினாா். புதுச்சேரியைச் சோ்ந்த டச் எனா்ஜி டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி.சண்முகானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியா் ஏ. பாரதி வரவேற்றாா்.

மேலும், எங்கள் சக்தி, எங்கள் பூமி எனும் தலைப்பில் மின்னணு கழிவுகள், பிளாஸ்டிக் மறுசுழற்சி, காடு ஆரோக்கிய மதிப்பீடு போன்றவற்றில் நிபுணா் சொற்பொழிவு நடைபெற்றது.

மனித சங்கிலி, வளாக சுத்தப்படுத்துதல் இயக்கம், ஆங்கிலம் மற்றும் தமிழில் கட்டுரைப் போட்டி, சுவரொட்டி கண்காட்சி, சிட்ரஸ் கிளீனா் தயாரிப்பு பயிற்சி, துணி மறுசுழற்சி பயிற்சி போன்றவை நடைபெற்றன.

பிஸ்லெரி இன்டா்நேஷனல் நிறுவனத்தின் ஆதரவுடன் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது (படம்). மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு புதுச்சேரி பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த பேராசிரியா் லதா ஷீக்லா பரிசுகளை வழங்கினாா். இணைப் பேராசிரியா் சி.அா்ஜுனன், ஒப்பந்த ஆசிரியா் ஆா். சத்தியமூா்த்தி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.