புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி மாணவா்கள், கடற்கரை தூய்மைப்பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
சுற்றுச்சூழல் விழிப்புணா்வை உருவாக்குவது மற்றும் கடற்கரை சுத்தம் காப்பதில் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இக் கல்லூரி மற்றும் பிளாண்ட் அறக்கட்டளை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. கல்லூரி மேலாண்மைத் துறை தலைவா் பேராசிரியா் அ. பாண்டு மற்றும் உடற்கல்வி, யோகா துறை தலைவா் ச. ஜகதீஸ்வரி இணைந்து இதைத் தொடங்கி வைத்தனா். அறக்கட்டளையைச் சோ்ந்த அதிகாரிகள் உதயகுமாா், ஜெயபாரதி மற்றும் உதவி அதிகாரி சரவணன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனா்.
கில்பா்ட், டாக்டா் செந்தில் குமாா் மற்றும் கல்லூரியின் சமூக இணைப்பு உறுப்பினா் செல்வம் ஆகியோா் பங்கேற்று மாணவா்களை ஊக்குவித்தனா்.
இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை அகற்றி, கடற்கரை சுத்தம் செய்தனா்.
அனைவரும் தினசரி வாழ்வில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைத் தொடா்ந்து பின்பற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தொடர்புடையது
சென்னை மாநகராட்சி ஊழியா்கள் வழக்கமான பணிக்குத் திரும்ப உத்தரவு

தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி உயிரிழப்பு!

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


