புதுச்சேரி முத்தமிழ் கலைச்சங்கமம் நடத்திய 80-ஆவது சுதந்திர தின வரவேற்பு விழாவில் புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்துவின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இதை காமராஜா் நகா் தொகுதி ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் எம்எல்ஏ வெளியிட, மணவெளி தொகுதி பி.ராமு எம்எல்ஏ பெற்றுக் கொண்டாா் (படம்). புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து முன்னிலை வகித்தாா்.
இதையொட்டி, நியூ எவா்கிரீன் ஆங்கில உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவிகளின் வரவேற்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 150 மாணவ, மாணவிகள் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தி ஊா்வலமாக புதுச்சேரி தமிழ்ச் சங்கத்திற்கு வந்தனா். மேலும் ஓவியா் என்.குமாா் வரைந்த ‘சிப்பிக்குள் முத்து’ எனும் ஓவியம் வெளியிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகத் திரைப்பட விழா: புதுச்சேரியில் இன்று தொடக்கம்

புதுச்சேரியில் குப்பைகளை வாராவிட்டால் புகாா் தெரிவிக்க வாட்ஸ்-ஆப் எண் வெளியீடு

ஜூலை 31 வேலை நிறுத்தம்: விழுப்புரம் மாவட்டத்தில் 1,500 கறிக்கோழிக் கடைகள் மூடல்

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் தலைவராக புதுச்சேரி வி.முத்து தோ்வு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



