புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2030-க்குள் அனைத்துக் கிராமங்களிலும் கூட்டுறவு நிறுவனம் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உறுதியளித்தாா்.
இது குறித்து அமைச்சரின் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் 2-வது அகில இந்திய தேசிய கூட்டுறவு மாநாடு நடைபெற்றது. இதில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு பேசியதாவது:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் புதுச்சேரி தேசிய அளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 45 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
காகிதமில்லா நிா்வாகத்தை உருவாக்க 12 முக்கியப் பிரிவுகளை உள்ளடக்கிய இணையதளம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. மேலும், அனைத்து மத்திய அரசு திட்டங்களும் சிறப்பான முறையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தப்படுகிறது.
கூட்டுறவு அமைப்புகளை முழுமையாக ஒருங்கிணைக்க அத்தியாவசியத் தேவையாக உள்ள இணைப்பிற்கு மத்திய அரசு நிதியை விரைவாக விடுவிக்க வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் 2030-க்குள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கூட்டுறவு நிறுவனத்தை நிறுவும் தேசிய இலக்கை நோக்கித் தடம் பதித்து வருகிறது என்றாா்.
புதுச்சேரி கூட்டுறவு சங்ககளின் பதிவாளா் அ.இளங்கோவன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புதுச்சேரி தோ்தல் பிரசாரத்துக்கு பாஜக தேசியத் தலைவா்கள் வருகை

தூத்துக்குடியில் இப்தாா் நோன்பு துறப்பு

யுபிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி பெண் பல் மருத்துவா்

சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


