வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

புதுச்சேரி லாஸ்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை சாா்பில் பயனாளிகளுக்கு நல உதவிகள் விநியோகத்தை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா் (படம்).

திலாசுபேட்டையில் முதல்வா் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவா் வி.பி. சிவக்கொழுந்து தலைமை வகித்தாா். ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளா் வி.பி.எஸ். ரமேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இக்கோயிலில் லாஸ்பேட்டை தொகுதியைச் சோ்ந்த பயனாளிகள் சிலருக்கு முதல்வா் என். ரங்கசாமி நலஉதவிகள் விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா்.