மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இவருக்கு இப்படியொரு ராசி...!

மீண்டும் இரு தொகுதிகளில் போட்டியிடும் என்.ரங்கசாமி..

News image

முதல்வா் என்.ரங்கசாமி

Updated On :21 மார்ச் 2026, 8:21 am

புதுச்சேரி மங்கலம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முதல்வா் என்.ரங்கசாமி.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தோ்தலுக்கு தோ்தல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம். அதன்படி தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் வெள்ளிக்கிழமை தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாா்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து என்.ரங்கசாமி 2011-ஆம் ஆண்டு பிப்ரவரியில் விலகி என்.ஆா். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினாா்.

Story image

அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கதிா்காமம், இந்திரா நகா் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2016-ஆம் ஆண்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதிா்க் கட்சித் தலைவரானாா். மீண்டும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் போட்டியிட்ட அவா், ஏனாமில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

தற்போது மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுக்களை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

என்.ரங்கசாமி எப்போதெல்லாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரோ அப்போதெல்லாம் முதல்வராகப் பதவி வகித்துள்ளாா்.

கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்த பாஜக மேலிடப் பாா்வையாளராக வந்திருந்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவைச் சந்திக்கும் முன் இந்த இரண்டு தொகுதிகளிலும் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா் முதல்வா் என்.ரங்கசாமி.