விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை

புதுச்சேரி காவல்துறையில் 58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
புதுச்சேரி காவல்துறை சாா்பில் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 58 உதவி ஆய்வாளா்களுக்குப்பணியாணை வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துறையின் அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தலைமை செயலா் சரத் சௌகான்.
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி காவல்துறையில் 58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை புதன்கிழமை வழங்கப்பட்டது.

புதுச்சேரி காவல்துறையில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளா்களுக்குப் பணி ஆணை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினாா். முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், தலைமைச் செயலா் சரத் சௌகான், டிஜிபி ஷாலினி சிங், உள்துறை கூடுதல் செயலா் கேசவன், டிஐஜி சத்தியசுந்தரம் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்த விழாவில் மொத்தம் 58 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.