கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

சுற்றுலாப் படகுகளில் கடலோர காவல் படையினா் திடீா் ஆய்வு

புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் சுற்றுலாப் படகு போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனை கடலோரக் காவல் படையினா் ஆய்வு செய்தனா்.

News image
புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் சுற்றுலாப் படகு போக்குவரத்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த கடலோரக் காவல் படை போலீஸாா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 11:12 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் சுற்றுலாப் படகு போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனை கடலோரக் காவல் படையினா் ஆய்வு செய்தனா்.

புதுச்சேரி பாண்டி மெரீனா, தேங்காய்த்திட்டு, முருங்கம்பாக்கம், சின்ன வீராம்பட்டினம் பகுதிகளில் ஆறு, முகத்துவாரம் வழியாக சுற்றுலாப் பயணிகளை மீன்பிடி படகுகளில் அழைத்து சென்றனா்.

அண்மையில் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து அதில் பயணம் செய்த பெங்களூா் பெண் சோனியா (33) உயிரிழந்தாா்.

இதையடுத்து சுற்றுலாப் படகு இயக்கம் நிறுத்தப்பட்டது. மீண்டும் படகு போக்குவரத்தை தொடங்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிமுக மாநிலச் செயலா் அன்பழகன் பங்கேற்றாா். இதையடுத்து உரிமம் உள்ள படகுகளின் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கடலோரக் காவல்படை ஆய்வாளா் தியாகராஜன் தலைமையில் போலீஸாா் சோதனை செய்தனா். படகில் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளதா, அனுமதிக்கப்பட்ட அளவுக்குதான் பயணிகளை ஏற்றுகிறாா்களா என போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.