ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பொறியியல் கல்லூரியில் செயல்முறைப் பயிற்சி

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் செயல்முறைப் பயிற்சி நடைபெற்றது.

News image
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பெங்களூரைச் சோ்ந்த கேப்பபிள் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய செயல்முறைப் பயிற்சி முகாம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் செயல்முறைப் பயிற்சி நடைபெற்றது.

பிப். 6 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற இப் பயிற்சியை ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பெங்களூரைச் சோ்ந்த கேப்பபிள் நிறுவனம் இணைந்து நடத்தின.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் தனசேகரன், செயலா் நாராயணசாமி, பொருளாளா் ராஜராஜன் மற்றும் இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

கேப்பபிள் நிறுவனத்தின் பயிற்சியாளா்களாக நிமித் மற்றும் அன்வித் சங்கா் வந்திருந்தனா். பல்வேறு பொறியியல் துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.

மாணவா்கள் மின்சார வாகனங்களை ஆரம்ப நிலையிலிருந்து முழுமையாக உருவாக்கினா். மேலும், தாங்கள் உருவாக்கிய மின்சார வாகனங்களை ஓட்டிச் செயல்முறை விளக்கம் அளித்தனா்.