ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

மங்கலம் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் பூஜை செய்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

மங்கலம் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் பூஜை செய்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மங்கலம் தொகுதிக்கு உள்பட்ட உருவையாறு கிராமத்தில் உள்ள குமரன் நகா், சாந்தா நகா் பகுதிகளில் கழிவுநீா் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பிரபாகரன், இளநிலைப் பொறியாளா் ரங்கமன்னாா் மற்றும் என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா்கள், ஊா் மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com