கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சுற்றுலா பயணிகளை மீன்பிடி படகில் ஏற்றிச்செல்லக்கூடாது: காவல்துறை எச்சரிக்கை

சுற்றுலா பயணிகளை மீன்பிடி படகில் கடலுக்கு ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:31 pm

Syndication

சுற்றுலா பயணிகளை மீன்பிடி படகில் கடலுக்கு ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, கடலோர காவல்நிலைய ஆய்வாளா் தியாகராஜன் மீனவ கிராமங்களுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரும் மாா்ச் 3-ம் தேதி மாசிமக திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து மீனவ மக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

புதுச்சேரி அனைத்து கடலோர மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீன்பிடி படகு உரிமையாளா்கள் அவா்களுடைய மீன்பிடி படகில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளைக் கடலுக்கு ஏற்றி செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே காவல்துறை எச்சரிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.