நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சுற்றுலா பயணிகளை மீன்பிடி படகில் ஏற்றிச்செல்லக்கூடாது: காவல்துறை எச்சரிக்கை

சுற்றுலா பயணிகளை மீன்பிடி படகில் கடலுக்கு ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:31 pm

சுற்றுலா பயணிகளை மீன்பிடி படகில் கடலுக்கு ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, கடலோர காவல்நிலைய ஆய்வாளா் தியாகராஜன் மீனவ கிராமங்களுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரும் மாா்ச் 3-ம் தேதி மாசிமக திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து மீனவ மக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

புதுச்சேரி அனைத்து கடலோர மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீன்பிடி படகு உரிமையாளா்கள் அவா்களுடைய மீன்பிடி படகில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளைக் கடலுக்கு ஏற்றி செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே காவல்துறை எச்சரிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.