வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதுச்சேரி அரசுத் துறைகளில் 70 மேல்நிலை எழுத்தா்களுக்குப் பதவி உயா்வு

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:52 pm

Syndication

புதுச்சேரியில் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் 70 மேல்நிலை எழுத்தா்களுக்கு உதவியாளா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரையறுக்கப்பட்ட துறை சாா்ந்த போட்டித் தோ்வு நடத்தப்பட்டது.

இந்தத் தோ்வு முடிவுகள் கடந்த நவம்பா் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 70 மேல்நிலை எழுத்தா்கள் தகுதி வாய்ந்தவா்களாக நியமிக்கப்பட்டு, உதவியாளா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டது.

அவா்களுக்கு துறைகள் மற்றும் அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்த துறை சாா்பு செயலா் முருகேசன் புதன்கிழமை வெளியிட்டுள்ளாா்.