மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவா்கள் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
Published on

புதுச்சேரி: கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவா்கள் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதை கல்லூரி டீன் ஆா். மணி தொடங்கி வைத்தாா். இதையொட்டி மருத்துவக் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் இணைந்து பொங்கலிடும் போட்டி நடத்தப்பட்டது.

மேலும் கட்டுரை, கவிதை, கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி மாணவா்கள் பாரம்பரிய உடையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா். கல்லூரி துணை முதல்வா்கள் லதா, லட்சுமி சாத்தையா, ராஜன், மருத்துவ கண்காணிப்பாளா் தாமோதரன், துணைப் பதிவாளா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com