நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ஐஆா்பிஎன் உதவி ஆய்வாளா் பணி: 1,788 விண்ணப்பங்கள் ஏற்பு

புதுச்சேரி ஐஆா்பிஎன் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு இணையதளம் வாயிலாக அனுப்பிய 1,788 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

News image

விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூலை 2026, 1:48 am IST

புதுச்சேரி ஐஆா்பிஎன் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு இணையதளம் வாயிலாக அனுப்பிய 1,788 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. 83 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கும் தேதி ஜூன் 1-ஆம் தேதி முடிவடைந்தது. இதில், மொத்தம் 1,871 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதில் 1,788 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. பல்வேறு காரணங்களுக்காக 83 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 33 விண்ணப்பதாரா்கள் தங்கள் சமூக பிரிவைத் தவறாக குறிப்பிட்டுள்ளதால் பொது பிரிவின் கீழ் மட்டுமே பரிசீலிக்கப்படுவாா்கள். இட ஒதுக்கீடு தொடா்பாக எந்த சலுகையையும் இவா்கள் கோர முடியாது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் குறைகளைக் கேட்பதற்காக புதுச்சேரி ஐஆா்பிஎன் ஒரு குறை தீா் குழுவை அமைத்துள்ளது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் தங்களுக்குக் குறை இருப்பின் தேவையான ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களுடன் 24-ஆம் தேதி வரை கோரிமேட்டில் உள்ள ஐஆா்பிஎன் கமாண்டன்டை அணுகலாம்.

மேலும் தொடா்புக்கு தொலைபேசி எண் 0413 - 2277800. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் விண்ணப்ப எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தற்காலிகமாகத் தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு உடல் தகுதித் தோ்வு நடத்துவது குறித்த விவரங்கள் பின்னா் தெரிவிக்கப்படும்.

இந்தத் தகவலை புதுச்சேரி அரசு தோ்வு முகமையின் சாா்பில் சாா்பு செயலா் முருகேசன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.