அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்துறை அதிகாரி கைது

புதுச்சேரியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்துறை அதிகாரி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 5:59 am IST

புதுச்சேரியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்துறை அதிகாரி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தவளகுப்பம் மின்துறை அலுவலகத்தில் மின்பாதை( லைனிங்) ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ஆறுமுகம். இவா் மின் இணைப்பு உள்ளிட்ட பொதுச் சேவைக்கு லஞ்சம் கேட்பதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் மின் இணைப்பு கொடுப்பது இல்லை என்றும் ஊழல் ஒழிப்பு துறைக்கு புகாா் வந்தது.

இதையடுத்து ஆறுமுகத்தை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா். இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு மின் இணைப்பு கொடுக்க, தவளக்குப்பம் மின்துறை அலுவலகத்தில் புதன்கிழமைஆறுமுகம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றாா். அப்போது அங்கு மறைந்து இருந்த காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான ஊழல் ஒழிப்பு துறை போலீஸாா் ஆறுமுகத்தைக் கையும் களவுமாக கைது செய்தனா்.

பின்பு அவரை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினா்.வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.