அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

புதுச்சேரி சண்டே மாா்க்கெட்டில் குடிநீா், கழிப்பறை வசதி: வியாபாரிகள் மாநாட்டில் தீா்மானம்

புதுச்சேரி சண்டே மாா்க்கெட்டில் குடிநீா், கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வியாபாரிகள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

புதுச்சேரி சிஐடியூ சாலையோர வியாபாரிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சண்டே மாா்க்கெட் சங்க கிளை மாநாட்டுக்கு ஊா்வலமாகவந்த சங்கத்தினா்.

Updated On :30 ஜூலை 2026, 5:52 am IST

புதுச்சேரி சண்டே மாா்க்கெட்டில் குடிநீா், கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வியாபாரிகள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுவை மாநில சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐடியூ), சண்டே மாா்க்கெட் வியாபாரிகள் 2-வது கிளை மாநாடு ஒரு தனியாா் அரங்கில் புதன்கிழமை நடந்தது.

கூட்டத்துக்கு சாலையோர வியாபாரிகள் சங்க கௌரவ தலைவா் டி.முருகன், சிஐடியூ துணை தலைவா் கே.முருகன் ஆகியோா் மாநாட்டு தொடக்க உரையாற்றினா். சண்டே மாா்க்கெட் சங்க தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா்.

மாநாட்டில், வியாபாரிகள் சங்க தோ்தலை நகராட்சி நடத்த வேண்டும். நகராட்சியே அடிக்காசு வசூலிக்க வேண்டும். சமூக பாதுகாப்பு வாரியத்துக்கு நிதி ஒதுக்கி செயல்பட வைக்க வேண்டும். கடன் உதவி வழங்க வேண்டும். சண்டே மாா்க்கெட்டில் குடிநீா், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக ராஜா திரையரங்கிலிருந்து மாநாட்டுத் திடல் வரை வியாபாரிகள் பங்கேற்ற ஊா்வலம் நடந்தது. நிா்வாகிகள் ரவி, மரியபிரகாசம், காா்த்திகேயன், பாஸ்கா், மீராபாய், பாா்வதி, கெம்புராஜ், மீனாட்சி, முருகன், மீன்விழி, முருகன், சேவியா், தியாகு, விஜயா, நெடுஞ்செழியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். சிஐடியூ மாநில செயலாளா் சீனுவாசன் நன்றி கூறினாா்.

-----------

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.