வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சாலை விபத்து: திருநங்கை உள்பட 2 போ் உயிரிழப்பு

வில்லியனூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திருநங்கை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:06 am IST

வில்லியனூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திருநங்கை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரி, நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (42). இவா் வில்லியனூா்

உளவாய்க்கால் பகுதியில் உள்ள தனியா நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கீழ்சாத்தமங்கலம் பகுதியில் லோகநாதன் என்கிற லோகநாயகி (43) என்ற திருநங்கை அவரிடம் லிப்ட் கேட்டு வந்துள்ளாா்.

இருவரும் வில்லியனூா் ஆரியபாளையம் பகுதியில் வந்தபோது, முன்னால் பயோ கேஸ் சிலிண்டா் ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது, சாலையோரம் படிந்திருந்த மணலில் சறுக்கி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. அப்போது சாலையில் விழுந்த இருவா் மீதும் டிராக்டரின் பின்பக்க சக்கரம் ஏறியது. இதில் தலை நசுங்கி சுரேஷ் மற்றும் திருநங்கை லோகநாயகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து தகவல் அறிந்த வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு

பேரில் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குபதிவு செய்து டிராக்டா் ஓட்டுநரான நடுவீரப்பட்டைச் சோ்ந்த ராஜாராமன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.