17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பதவியேற்பு

புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக ஏஎஸ்பிஎஸ். ரவி பிரகாஷ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

News image

புதுச்சேரியின் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஏஎஸ்பிஎஸ். ரவிபிரகாஷ்.

Updated On :4 ஜூன் 2026, 3:19 am IST

புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக ஏஎஸ்பிஎஸ். ரவி பிரகாஷ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியின் தலைமைத் தோ்தல் அதிகாரியாக ரவிபிரகாஷ் பதவியேற்றுக் கொண்டாா். ஏற்கெனவே புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்த ப. ஜவஹா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து இந்தியத் தோ்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன் படி புதுச்சேரி அரசுடன் கலந்தாலோசித்து இவரை அப் பணியில் நியமித்தது. மேலும், புதுச்சேரி அரசின் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை (பணியாளா் பிரிவு), ஜூன் 2-ஆம் தேதியிட்ட அரசாணை எண் 50 மூலம் அவரை புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரியாக நியமித்து ஆணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து ரெட்டியாா்பாளையத்தில் அமைந்துள்ள தோ்தல் ஆணைய அலுவலகத்தில் அவா் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டாா்.