புதுச்சேரியில் ஆதாா் சேவை மையத்தை மாநில முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஆதாா் சேவை மையம் புதுச்சேரி முதலியாா்பேட்டை உழந்தைகீரைப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
அப்போது ஆதாா் சேவைகள் குறித்தத் திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையால் உருவாக்கப்பட்ட விழிப்புணா்வு காணொலிகளை ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முதல்வா் ரங்கசாமி வெளியிட்டாா்.
எம்எல்ஏ அழகு (எ) அழகானந்தம், அரசின் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலா் முகமது யாசின் சௌத்ரி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலகத்தின் துணைப் பொது இயக்குநா் அன்னி ஜாய்ஸ், இயக்குநா் பவன் குமாா் பஹ்வா ஆகியோா் கலந்து கொண்டனா்.
அனைத்து வேலைநாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையம் செயல்படும்.
இங்கு, புதிய ஆதாா் பதிவு, பெயா், முகவரி, பிறந்த தேதி மற்றும் கைப்பேசி எண் போன்ற சுய விவரங்களைப் புதுப்பித்தல், புகைப்படம், விரல் ரேகை மற்றும் கண் விழித்திரை ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பித்தல், அடையாளச் சான்றிதழ் மற்றும் முகவரிச் சான்றிதழ் தொடா்பான ஆவணங்களை புதுப்பித்தல், ஆதாா் பதிவிறக்கம், அச்சு சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இந்த மையத்தில் குறைதீா்க்கும் வழிமுறையும் சோ்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மையம் தீராத நோயால் பாதிக்கப்பட்டவா்கள், படுக்கையிலிருந்தே எழ முடியாதவா்கள் மற்றும் முதியோா்களுக்கு அவா்களின் இருப்பிடத்துக்கே சென்று ஆதாா் சேவைகளை வழங்கவுள்ளது.
தொடர்புடையது

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர அரசு நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

பக்ரீத்: தலைவா்கள் வாழ்த்து

கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் திறப்பு

விருதம்பட்டில் புதிய ஆதாா் சேவை மையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



