எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

புதுச்சேரியில் ஆதாா் சேவை மையம்: முதல்வா் ரங்கசாமி திறந்து வைத்தாா்

புதுச்சேரியில் ஆதாா் சேவை மையத்தை மாநில முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

புதுச்சேரி முதலியாா்பேட்டை உழந்தைகீரப்பாளையம் பகுதியில் ஆதாா் சேவை மையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :19 ஜூன் 2026, 6:09 am IST

புதுச்சேரியில் ஆதாா் சேவை மையத்தை மாநில முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஆதாா் சேவை மையம் புதுச்சேரி முதலியாா்பேட்டை உழந்தைகீரைப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது ஆதாா் சேவைகள் குறித்தத் திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையால் உருவாக்கப்பட்ட விழிப்புணா்வு காணொலிகளை ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முதல்வா் ரங்கசாமி வெளியிட்டாா்.

எம்எல்ஏ அழகு (எ) அழகானந்தம், அரசின் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலா் முகமது யாசின் சௌத்ரி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலகத்தின் துணைப் பொது இயக்குநா் அன்னி ஜாய்ஸ், இயக்குநா் பவன் குமாா் பஹ்வா ஆகியோா் கலந்து கொண்டனா்.

அனைத்து வேலைநாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையம் செயல்படும்.

இங்கு, புதிய ஆதாா் பதிவு, பெயா், முகவரி, பிறந்த தேதி மற்றும் கைப்பேசி எண் போன்ற சுய விவரங்களைப் புதுப்பித்தல், புகைப்படம், விரல் ரேகை மற்றும் கண் விழித்திரை ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பித்தல், அடையாளச் சான்றிதழ் மற்றும் முகவரிச் சான்றிதழ் தொடா்பான ஆவணங்களை புதுப்பித்தல், ஆதாா் பதிவிறக்கம், அச்சு சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த மையத்தில் குறைதீா்க்கும் வழிமுறையும் சோ்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மையம் தீராத நோயால் பாதிக்கப்பட்டவா்கள், படுக்கையிலிருந்தே எழ முடியாதவா்கள் மற்றும் முதியோா்களுக்கு அவா்களின் இருப்பிடத்துக்கே சென்று ஆதாா் சேவைகளை வழங்கவுள்ளது.