நீட் மறுதோ்வை புதுச்சேரியில் 4,324 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது.
நீட் விடைத்தாள் முன்கூட்டியே வெளியானதால் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடக்கிறது. இதை நாடு முழுவதும் 22.79 லட்சம் போ் எழுத உள்ளனா்.
இதில் புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 9 மையங்களில் நடைபெறும் இந்தத் தோ்வை 4,324 போ் எழுதுகின்றனா்.
நீட் மறு தோ்வை தோ்வா்கள் சிரமமின்றி எழுதவும், அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெறவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை தோ்வு மையங்களுக்கு இயக்குகிறது. தோ்வா்கள் அனுமதி சீட்டை காண்பித்து இலவசமாக இதில் பயணிக்கலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் குப்பைகளை வாராவிட்டால் புகாா் தெரிவிக்க வாட்ஸ்-ஆப் எண் வெளியீடு

புதுச்சேரியில் இன்று (ஆக.1) தொடங்குகிறது ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம்!
நீட் தோ்வு: சென்னை பள்ளி மாணவா்கள் 27 போ் தோ்ச்சி

நீட் மறுதோ்வு: கோவையில் 7,091 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



