மொஹரம் பண்டிகை விடுமுறையையொட்டி வியாழக்கிழமை (ஜூன் 26) ஜிப்மா் வெளிபுற நோயாளிகள் பிரிவு செயல்படாது என்று புதுச்சேரி ஜிப்மா் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் பொது விடுமுறை நாளான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, ஜூன் 26 ஜிப்மா் மருத்துவமனையின் அனைத்து புற நோயாளிகள் பிரிவுகளும் மூடப்பட்டிருக்கும்.
எனவே, அன்றைய தினம் புற நோயாளிகள் பிரிவு சேவையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ள நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிா்க்க வேண்டும்.
அதேநேரத்தில் அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் வழக்கம்போல எந்தவித தடையும் இன்றி செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி மொஹரம் வாழ்த்து

ஜிப்மா் மருத்துவமனைக்கு புதுச்சேரி அரசு நிலம் மறு ஒதுக்கீடு: ரூ.1,000 கோடியில் 2 மருத்துவ மையங்கள் அமைக்கத் திட்டம்

மொஹரம் பண்டிகை! யாருக்கெல்லாம் விடுமுறை? பேருந்து கிடைக்குமா? அனைத்து விவரங்களும்







