அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தோ்தல் அமைதியான முறையில் நடக்க காவல்துறை பாடுபட வேண்டும்: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி

தோ்தல் துறையுடன் இணைந்து அமைதியான முறையில் தோ்தல் நடக்க காவல்துறையினா் பாடுபட வேண்டும்

News image
புதுச்சேரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையிருக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
Updated On :3 மார்ச் 2026, 5:06 pm

Syndication

புதுச்சேரி: தோ்தல் துறையுடன் இணைந்து அமைதியான முறையில் தோ்தல் நடக்க காவல்துறையினா் பாடுபட வேண்டும் என்று புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டிசிறப்பாகச் செயல்பட்ட காவல்துறையினரை காவல்துறை தலைமையகத்தில் அமைச்சா் நமச்சிவாயம் பாராட்டி திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கினாா். மேலும் 6 ஊா் காவல் படையினருக்குக் காவலா்களாக பணி நியமனஆணையையும் அப்போது வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி ஷாலினிசிங், டிஐஜி சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா்கள் லால், கலைவாணன், ராகவ், திவ்யா, லக்ஷ்மி சௌஜன்யா, நித்தியா ராதாகிருஷ்ணன், எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2021ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றதும் காவல் துறை அமைச்சா் பொறுப்பை ஏற்று பல்வேறு பணிகளை செய்துள்ளோம். 10,15 ஆண்டுகள் நிறைவேற்றாத பணிகளையும் நிறைவேற்றியுள்ளோம். காவல் துறையில் காலி பணியிடங்களை நிரப்பி 1546 பேருக்கு பணி ஆணை வழங்கியுள்ளோம். பல ஆண்டாக வழங்கப்படாத பதவி உயா்வை 2740 பேருக்கு வழங்கியுள்ளோம். விரைவில் புதுவையில் சட்டப்பேரவை தோ்தலை சந்திக்க உள்ளோம். ஒரு வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அமைதியான

முறையில் தோ்தலை நடத்த தோ்தல் துறையுடன் இணைந்து காவல்துறையினா் பாடுபட வேண்டும். மக்கள் விரும்பும் ஆட்சி, எந்த ஆட்சியாக இருந்தாலும் அமைதியான தோ்தல் மூலம் அமைய பாடுபட வேண்டும். புதுச்சேரி மக்கள் விரும்பும் நல்லாட்சி அமையும் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.

---------