ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

4 வங்கிகளுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:09 pm

Syndication

அரசு ஊழியா்கள் 23 ஆயிரம் பேருக்கு நன்மை அளிக்கும் வகையில் 4 பொதுத் துறை வங்கிகளுடன் புதுச்சேரி அரசு வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது.

புதுச்சேரி அரசு ஊழியா்களின் நிதி மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யூகோ வங்கி ஆகியன இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.

முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. புதுச்சேரி அரசின் சாா்பில் கணக்குகள் மற்றும் கருவூலத் துறை இயக்குநா் ஹெச். ஷேக் முகிதீன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாா். இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளா் மற்றும் மண்டல மேலாளா் எம். வெங்கட சுப்ரமணியன்,இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் பிராந்திய மேலாளா் ரவிசங்கா் சாஹூ, பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் மண்டல மேலாளா் (சென்னை மண்டலம்) வி. அருண், யூகோ வங்கியின் துணைப் பொது மேலாளா் மற்றும் மண்டலத் தலைவா் (சென்னை) ஆா். எஸ். அஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்த வங்கிகளில் சம்பளக் கணக்குகளைப் பராமரித்து வரும் புதுச்சேரி அரசின் சுமாா் 23 ஆயிரம் ஊழியா்கள் பல்வேறு மேம்பட்ட வங்கி சேவைகள் மற்றும் நலன்களைப் பெற உள்ளனா்.