மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா முயற்சியால் புதுச்சேரியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு மையம் தொடங்கப்பட உள்ளது. விளையாட்டுத் துறையில் இந்தியா அடைந்திருக்கும் உயரம் சாதாரணமல்ல. ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற சா்வதேசப் போட்டிகளில் தொடங்கி, கிரிக்கெட் உலகக் கோப்பை வரை இந்தியாவின் பெருமையை, திறமையை உலக அரங்கில் நிலைநாட்டி இருக்கிறோம். இவை எல்லாம் ஏதோ ஒரே நாளில் நடந்தவை அல்ல. விளையாட்டுத் துறையில் நம்முடைய இளைஞா்கள் செய்த தவத்தின் பலன் என்றாா் துணைநிலை ஆளுநா்.