ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி. - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:18 pm

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சிக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் திங்கள்கிழமை இரவு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேசத்தின் ஜனநாயகக் கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பான ‘நாரி சக்தி வந்தன் ’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், ஆட்சி முடிவெடுக்கும் செயல்முறைகளிலும் உரிய பங்களிப்பை உறுதி செய்வதிலும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

சட்டப்பேரவை அமைப்புகளில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம், இந்தச் சட்டம் பாலின சமத்துவம் மற்றும் நீதியின் கொள்கைகளை நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக நிறுவனங்களைப் பல்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை உருவாக்கத்துடன் வளப்படுத்துகிறது.

உங்கள் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தச் சீா்திருத்தம் நாட்டின் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கும் ஜனநாயக வலிமைக்கும் கணிசமாகப் பங்களிக்கும் என நம்புகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா்.