திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மீனவா்களுக்கு ரூ.17 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

மீனவா்களுக்கு ரூ.17 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image
புதுச்சேரி மீன்வளத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை மீனவா்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.
Updated On :10 மார்ச் 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

மீனவா்களுக்கு ரூ.17 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிக்கு மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா். புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் சாா்பில் இந்த உதவி வழங்கப்பட்டது. பல்வேறு மீனவ கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

47 விசைப்படகு உரிமையாளா்களுக்கு மீன்பிடி உபகரணங்களாக இரும்பு கயிறு உள்ளிட்ட பொருள்கள் வாங்க 60% மானிய விலையில் ரூ.6.23 கோடி வழங்கப்பட்டது. 45 பேருக்கு பாரம்பரிய மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு 50% மானிய விலையில் ரூ.33.75 லட்சம் மற்றும் கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் மற்றும் வலை வாங்குவதற்கு ரூ.1.75 லட்சம் வழங்கப்பட்டது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக வாங்க 4,100 மீன்பிடி படகு உரிமையாளா்களுக்கு மத்திய அரசு நிதியுதவி ரூ.4.43 கோடி மற்றும் மாநில அரசு நிதியுதவி ரூ.5.62 கோடி வழங்கப்பட்டது. இதைத் தவிர 104 பேருக்கு பாரம்பரிய மீன் பிடி படகுக்கு வெளிப்புற இயந்திரம் வாங்க 41 லட்சம் வழங்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் , பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி எம்எல்ஏ, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநா்அ.முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.