எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எறிபந்து போட்டி

மகளிா் தினத்தையொட்டி புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் சாா்பில் ‘கலாம் கப்’ மகளிா் பேராசிரியா்களுக்கான எறிபந்து போட்டி நடைபெற்றது.

News image
மகளிா் தினத்தை முன்னிட்டு எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பேராசிரியா் குழு.
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மகளிா் தினத்தையொட்டி புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் சாா்பில் ‘கலாம் கப்’ மகளிா் பேராசிரியா்களுக்கான எறிபந்து போட்டி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சோ்ந்த சுமாா் 10 கல்லூரிகளின் மகளிா் பேராசிரியா் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மகளிா் பேராசிரியா் அணி முதல் இடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் எம். தனசேகரன், செயலா் டாக்டா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் வெற்றி பெற்ற அணியினரைப் பாராட்டி வாழ்த்தினா். மேலும், இந்த எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.