புதுச்சேரி அரசு பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் சிறப்பு கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக இப் போட்டியில் சுமாா் 30 மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். இக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவா் பேராசியா் கிருங்கை சேதுபதி இப் போட்டிகளை ஒருங்கிணைத்தாா். இக் கல்லூரியின் தமிழ்த்துறை முத்தமிழ் மன்றமும், கல்லூரித் தர உறுதியளிப்புக் குழுவும், புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றமும் இணைந்து உலகத் தாய்மொழிநாள் மற்றும் உலக மகளிா் நாள் விழாவை நடத்தின. இதை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விழா நடைபெற்றபோது பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் முதல்வா் இரா. மதிவாணன், புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலா் பெ.பாலகங்காதரன், இக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியா் பா. பட்டம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
பேசும் ஓவியங்கள்...

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் கடும் போட்டி: எந்தக் கூட்டணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்?
புதுச்சேரியில் தவெக கூட்டணி: 2 தொகுதிகள் ஒதுக்கீடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


