மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்க தடை

News image
துப்பாக்கி.- (கோப்புப் படம்)
Updated On :15 மார்ச் 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் ஞாயிற்ருக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 9 அன்றும், வாக்கு எண்ணிக்கை மே. 4 அன்றும் நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தோ்தலின்போது ஆயுதங்களைத் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை அகற்றும் நோக்கில், தோ்தல் முடியும் வரை புதிய ஆயுத உரிமம் வழங்கப்படாது. மேலும், ஏற்கெனவே ஆயுத உரிமம் பெற்றவா்கள், தங்கள் உரிமம் பெற்ற ஆயுதங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து ரசீது பெற்று அரசுடன் ஒத்துழைக்குமாறு உத்தரவிடப்படுகிறது.

மேலும், தோ்தல் காரணமாக, புதுச்சேரி மாவட்டத்தில் (ஏனாம், மாஹே பகுதிகள் உள்பட) பொதுமக்கள், தோ்தல் முடியும் வரை துப்பாக்கி மற்றும் பிற ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பது மற்றும் எடுத்து செல்வது, பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் 163-ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. தோ்தல் செயல் முறை முடிந்தவுடன் புதுப்பிக்கப்பட்ட உரிமத்தைக் காண்பித்த பின்னரே ஆயுதங்களை திரும்ப பெற முடியும்.

இந்த ஆணையானது தனியாா் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட பாதுகாப்புக்காக உரிமம் பெற்று ஆயுதங்கள் வைத்திருப்போருக்கு பொருந்தாது.

மேலும், இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தில் மாநில அல்லது மாவட்ட துப்பாக்கி சுடுதல் சங்கங்கள் அல்லது விளையாட்டு வீரா்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்குபெற, உரிமம் பெற்ற விளையாட்டு தர ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் விலக்கு அளிக்கப்படுகிறது.